follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்பிரேசிலில் முதல் ஒமிக்ரோன் மரணம் பதிவு

பிரேசிலில் முதல் ஒமிக்ரோன் மரணம் பதிவு

Published on

பிரேசிலில் கோயாஸ் மாநிலத்தின் அபரேசிடா டி கோயானியா நகரில்  68 வயது வயோதிபர் ஒமிக்ரோன் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிபர் 68 வயதான நுரையீரல் நோய் காரணமாக  உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தவர் என அபரேசிடா டி கோயானியா நகர சபையின் தகவல் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான வயோதிபர் மூன்று தடுப்பூசி போட்டவராவார்.

அபரேசிடா டி கோயானியா நகரில் ஒமிக்ரோன் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட 10 நாட்களின் பின்னர் மரணம் நிகழ்ந்ததாக உள்ளூர் சுகாதார செயலகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன், அவுஸ்திரேலியா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் ஒமிக்ரோன் தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன.

பிரேசில் 2 கோடியே 23 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோடு, 619,641 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...