follow the truth

follow the truth

July, 5, 2025
Homeவிளையாட்டுஇலங்கை தொடரில் இருந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் விலகல்

இலங்கை தொடரில் இருந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் விலகல்

Published on

காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில் முன்னைய தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.  ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில்  பீல்டிங் செய்யும் போது சூரியகுமார் யாதவிற்கு கையில் காயம் ஏற்பட்டது.

இதனால் குறைந்தது மூன்று வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.   மேலும் தீபக் சாஹருக்கு தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.  இதனால் நேரடியாக அடுத்து ஐபிஎல் போட்டிகளில் சாஹர் விளையாட உள்ளார்.

இந்திய T20 அணி: ரோஹித் சர்மா (C), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (WK), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அவேஷ் கான்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை ரக்பி அணி

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று(04) நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் (Asia Rugby Emirates Men’s Championship...

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...