follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1சகல பாடசாலைகளும் நாளை முதல் ஆரம்பம்

சகல பாடசாலைகளும் நாளை முதல் ஆரம்பம்

Published on

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் நாளை(07) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள பாடசாலை தவணையின் போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை 20 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கான வகுப்புகளையும் தினமும் நடத்தலாம்.

மாணவர்களின் எண்ணிக்கை 21 முதல் 40 வரை இருந்தால், வகுப்பை இரண்டு குழுக்களாகப் பிரித்து ஒரு வாரம் இடைவெளியில் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

40 மாணவர்களுக்கு மேல் இருந்தால், மாணவர்களை மூன்று சம பிரிவுகளாகப் பிரித்து வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...