follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1பசில் - நரேந்திரமோடி இடையில் இன்று சந்திப்பு

பசில் – நரேந்திரமோடி இடையில் இன்று சந்திப்பு

Published on

இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

அத்துடன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரையும் நிதி அமைச்சர் இன்று சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நேற்றுப் பிற்பகல் இந்தியாவுக்கு பயணமானார். அவரின் இந்த 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இணைந்துள்ளார்.

ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக நிதி அமைச்சர் இந்தியாவுக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கடன் வசதியானது, அரிசி, கோதுமை, சீனி மற்றும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கானதாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...