follow the truth

follow the truth

July, 4, 2025
Homeவிளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடர் இன்று ஆரம்பம்!

15 ஆவது ஐபிஎல் தொடர் இன்று ஆரம்பம்!

Published on

15ஆவது ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் திருவிழா, பல கோடி இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஆரம்ப போட்டியில் நடப்பு சம்பியன் என்ற அந்தஸ்துடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜாவும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஸ்ரேயஸ் ஐயரும் தலைமை தாங்கவுள்ளனர்.

இதுவரை இரு அணிகளும் 26 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 17முறை சென்னை அணியும் எட்டு முறை கொல்கத்தா அணியும் வெற்றிபெற்றுள்ளன. இரு போட்டிக்கு முடிவு இல்லை.

மெகா ஏலத்திற்கு பிறகு புதிய வீரர்களை வரவேற்றுள்ள அணிகள், மிக உத்வேகத்துடன் இத்தொடரில் விளையாடவுள்ளன. அத்துடன் இம்முறை புதிதாக இரு அணிகளின் வருகையும் இரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...