follow the truth

follow the truth

June, 4, 2025
Homeஉள்நாடுகாலி முகத்திடல் மக்கள் போராட்டத்தின் 19ஆவது நாள் இன்று

காலி முகத்திடல் மக்கள் போராட்டத்தின் 19ஆவது நாள் இன்று

Published on

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட ஜனநாயக மாற்றங்களை கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டத்தின் 19 ஆவது நாள் இன்றாகும்(27).

18 நாட்கள் கடந்தும் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்சி சார்பற்ற போராட்டத்தில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கையில் தொய்வு ஏற்படவில்லை.

ஜனாதிபதி செயலகத்தின் பிரதான வாயிலை மறித்து மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலைஞர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

கோட்டாகோகம என பெயரிடப்பட்டுள்ள பகுதியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இதனிடையே, மக்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கையின் மற்றுமொரு கட்டத்தை அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோகம என்ற பெயரில் ஆரம்பித்துள்ளனர்.

இந்தநிலையில், தாம் இராஜினாமா செய்யப்போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்று(26) அறிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

20 உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்று கூடும் திகதி – வர்த்தமானி வெளியீடு

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட மேல் மாகாணத்தின் 21 உள்ளூராட்சி மன்றங்களின் அமர்வுகளை ஆரம்பிப்பதற்கான திகதி தொடர்பில் வர்த்தமானி...

சுற்றுலா ஹோட்டல்கள் சார்ந்த கடற்கரைகளைப் பராமரிப்பாளர்களை நியமிக்கும் வேலைத்திட்டம்

சுற்றுலா ஹோட்டல்களைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளின் தூய்மையைப் பேணும் நோக்கில் ஹோட்டல் கடற்கரைப் பராமரிப்பாளர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன்,...

தயாசிறி CIDயில் முன்னிலை

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (04) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு...