மே மாத ஆரம்பத்தில் எரிவாயு தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்திக்க முடியும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனத்திற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேலும் சில விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
இதனிடையே, எரிவாயு கொள்வனவிற்காக உலக வங்கியிடமிருந்து 90 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பெற்றுக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிதியை லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்களின் சந்தை கேள்விக்கு அமைய பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் கூறியுள்ளார்.