கொழும்பு மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் உள்ள நிரந்தர வீதித்தடைகளை அகற்றுமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகவியலாளர் ஷெனால் ஜயசேகர மற்றும் சுற்றாடல் செயற்பாட்டாளர் ஹேமந்த விதானகே ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வீதி அபிவிருத்தி அதிகார சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.