follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுஇன்று தனியார் பஸ்கள் இல்லை - CTB பஸ்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

இன்று தனியார் பஸ்கள் இல்லை – CTB பஸ்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

Published on

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

இதன்படி நேற்று நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகி செயற்பட தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அனைத்து பேருந்து சேவைகளும் இன்று வழமை போன்று முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்றைய தினம் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (a)

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆயுர்வேத துறையில் 304 மருத்துவர்களுக்கான நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சுதேச மருத்துவப் பிரிவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் கைதடி சித்த போதனா மருத்துவமனையை,...

பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில்

பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்...

சொத்து அறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு அபராதம்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு...