follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுபிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை குறைக்க தீர்மானம்

பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை குறைக்க தீர்மானம்

Published on

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை குறைப்பதற்கு பிரதமர் அலுவலகம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை நூற்றுக்கு 50 வீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், செலவீனங்களை குறைத்து ஏனைய அரச நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என பிரதமர் தனது அலுவலக பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய அரச நிறுவனங்களிலிருந்து திருப்பி அனுப்பிவைக்கப்பட்ட 26 உத்தியோகத்தர்கள் தங்களது நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், 16 வாகனங்களும் மீள அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட...

2,210 கிலோ சட்டவிரோத லன்ச் ஷீட்கள் பறிமுதல்

மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து...