follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடு10 வீத மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க திட்டம்!

10 வீத மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க திட்டம்!

Published on

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று மாலை பேச்சு நடத்தினார்.

இக்கலந்துரையாடலின் போது பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி சமரதுங்க, நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளித்தார்.

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், எதிர்வரும் 20 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமர் ஊடக உரிமையாளர்களிடம் தெரிவித்தார்

இந்த மாத இறுதிக்குள் ஊழியர்கள் மட்டத்திலான உடன்பாடு எட்டப்படும் என்று நம்புவதாக அவர் விளக்கினார்.

உணவுத் தட்டுப்பாடு காரணமாக, நாட்டில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்குவதாகவும் அவர் விளக்கினார். உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 3 வேளை உணவு வழங்க முடியாத 10% மக்களுக்கு அரசாங்கம் இலவசமாக உணவை வழங்க முடியும் என நம்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரிடம்...

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக “ஒரு அழகான வீடு -...