follow the truth

follow the truth

May, 22, 2024
Homeஉள்நாடுபச்சைக்குத்துதலை பயிற்சியின்றி முன்னெடுப்பது ஆபத்து!

பச்சைக்குத்துதலை பயிற்சியின்றி முன்னெடுப்பது ஆபத்து!

Published on

பச்சைக்குத்தல் கலையை முறையான பயிற்சியின்றி முன்னெடுப்பது ஆபத்தானது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

நாட்டில் பச்சைக்குத்தல் துறையில் ஈடுபடும் பெரும்பாலானோர், முறையான பயிற்சிகளில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பச்சைக்குத்தலுக்காக பயன்படுத்தப்படும் சாயங்கள் தொடர்பில், முறையான ஒழுங்கு விதிகள் பின்பற்றப்படாமை, மற்றும் அதற்காக பயன்படுத்தப்படும் ஊசிகளை சகலருக்கும் பயன்படுத்தப்படுகின்றமை, போன்ற செயற்பாடுகளால் மனித உடலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கதின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.

பச்சைக்குத்தல் துறையில் ஈடுபடுபவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

இந்த நிலையில், அவ்வாறு பயிற்சி பெறாத பச்சைக்குத்தல் துறையில் ஈடுபடுபவர்களை கண்டறிய விசேட தேடுதல்களை, மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கதின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...