இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு, பிரித்தானிய அரச குடும்பத்திற்கும் அதன் குடி மக்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த சிறப்பு நினைவுக் குறிப்பேட்டில் தனது இரங்கல் குறிப்பையும் பதிவிட்டார்.