follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுகடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

Published on

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு ஒக்டோபர் 3 திங்கட்கிழமை பிற்பகல் 02.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் 2.5 – 3.0 மீற்றர் வரையில் அலைகள் அதிகரித்து வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனால், மேற்கண்ட கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

காலியிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் 2.0 – 2.5 மீற்றர் வரையில் அலைகள் அதிகரித்து வீசுவதுடன் பலத்த காற்று மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை வீசும் சாத்தியம் காணப்படுகின்றது. எனவே மேற்கண்ட கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும்.

இதனால், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், காலியிலிருந்து கொழும்பு ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...