follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுஊரடங்கு தொடர்பில் நாளை இறுதி தீர்மானம்

ஊரடங்கு தொடர்பில் நாளை இறுதி தீர்மானம்

Published on

எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்களை நீடிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை இடம்பெறவுள்ள கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தின் போது எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கை விசேட வைத்தியர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை விடுத்து நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என கோரியுள்ளது.

இலங்கை கொவிட் பரவலில் சிவப்பு வலையத்தில் உள்ளதாகவும் இது பச்சை வலையமாக மாறும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை இடம்பெறும் கூட்டத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வயதெல்லை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...