follow the truth

follow the truth

July, 15, 2025
Homeஉலகம்நேபாள விமானத்தின் கருப்பு பெட்டிகள் மீட்பு

நேபாள விமானத்தின் கருப்பு பெட்டிகள் மீட்பு

Published on

நேபாளத்தில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்புக் குழுவினர் கைப்பற்றி உள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கொக்பிட் வொய்ஸ் ரெக்கோர்டர் மற்றும் ஃபிளைட் டேட்டா ரெக்கோர்டர் ஆகிய இரண்டும், சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து பொக்காரா நோக்கி சென்ற விமானம் பொக்காரா விமான நிலையத்தை நெருங்கியபோது அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பற்றியது.

விமானத்தில் பயணித்த 72 பேரும் உயிரிழந்தனர். இதுவரை 69 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. விபத்து குறித்து விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா

சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் மூலம் நேற்று...

பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதித்த வியட்நாம்

வியட்நாமில், காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக...

காசா ‘மனிதாபிமான நகரம்’ திட்டம் – வதை முகாமுக்கு சமம் என கடும் எதிர்ப்பு

தெற்கு காசாவில் உள்ள ராஃபாவில் இடிபாடுகளில் 'மனிதாபிமான நகரம்' ஒன்றை கட்டும் திட்டத்தை காட்ஸ் முன்மொழிந்தார். தெற்கு காசாவின் இடிபாடுகளில்...