follow the truth

follow the truth

July, 29, 2025
Homeஉள்நாடுஇன்று முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்

இன்று முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்

Published on

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முதல் 8 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ளன

கொவிட் பரவல் காரணமாகக் கடந்த காலத்தில் நாடாளுமன்ற அமர்வுகளைத் திட்டமிட்டப்படி நடத்த முடியாமல் போனது.

இதன் காரணமாக அரசாங்கத்தினால் இறுதி நேரத்தில் பதில் வழங்க முடியாமல் போன கேள்விகளுக்கான பதில்கள் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளன.

அதேநேரம், நாளைய தினம், நிதி மற்றும் வரி தொடர்பான கட்டளைகள் மற்றும் விதிமுறைகள் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளன.

கனிய எண்ணெய் வள சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, அடுத்த ஆண்டுக்கான பாதீடு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

அது தொடர்பான ஒதுக்கீட்டு சட்டமூலம், இந்த வார நாடாளுமன்ற அமர்வில் நிதியமைச்சரினால் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த...

“கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த மாலைதீவுகள் பணியாற்றும்”

ஜனாதிபதி திசாநாயக்கவையும் அவரது தூதுக்குழுவையும் மாலைதீவிற்கு வரவேற்பது எனக்குக் கிடைத்த பெரும் மரியாதை மற்றும் பாக்கியம் ஆகும். உங்கள்...

நாமல் இன்று கைதாகும் சாத்தியம்

கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனு மூலம்...