follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP2களனிதிஸ்ஸ மீண்டும் சேவையில் இணைந்தது

களனிதிஸ்ஸ மீண்டும் சேவையில் இணைந்தது

Published on

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 08.00 மணியளவில் மீண்டும் ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக ஆலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

போதியளவு நாப்தா இல்லாததால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் தற்போதுள்ள நாப்தாவைக் கொண்டு மீள் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது இன்னும் ஒன்றரை நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மின்சார சபையினால் பணம் செலுத்தப்படாமையால் நாப்தா வழங்க மறுத்தமையே இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...