follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுஆஷூ மாரசிங்கவுக்கு மீண்டும் ஜனாதிபதி ஆலோசகர் பதவி

ஆஷூ மாரசிங்கவுக்கு மீண்டும் ஜனாதிபதி ஆலோசகர் பதவி

Published on

பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சமீபத்தில், ஆஷு மாரசிங்கவின் காதலியான ஆதர்ஷா கரதனாவின் செல்ல நாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி, சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பரவி வந்த நிலையில் பேராசிரியர் ஆசு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஆதர்ஷ கரந்தனவுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டதுடன், ஆஷு மாரசிங்க மிருகத் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தியிருந்தார். ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் 500 மில்லியன் ரூபாவும், ஆதர்ஷ கரதனவிடம் ஒரு பில்லியன் ரூபாவும் கோரி இடைக்கால மேன்முறையீட்டை ஆஷு மாரசிங்க தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை, கடந்த 31ஆம் திகதி, பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் அதே பதவியில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...