follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுதபால் மூல வாக்கெடுப்பு 22-23-24…

தபால் மூல வாக்கெடுப்பு 22-23-24…

Published on

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 22,23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை தபால் மூல வாக்களிப்பிற்கு சுமார் எட்டு இலட்சம் பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தபால் வாக்குகள் அடங்கிய முன்பதிவு செய்யப்பட்ட பொதிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்களில் கையளிக்கப்படவுள்ளதாகவும், உத்தியோகப்பூர்வ வாக்காளர் அடையாள அட்டை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

339 உள்ளுர் அதிகாரசபைகளுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை அங்கீகரிக்கப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 339 சுயேட்சை குழுக்கள் ஊடாக 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளார்கள்.

காலி மாவட்டம் எல்பிடிய பிரதேச சபை, அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை ஆகிய தேர்தல் தொகுதிகளை தவிர்த்து நாடளாவிய ரீதியில் உள்ள 339 உள்ளுர் அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பை நடத்தும் பணிகளை 24 மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்...

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்...

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் பொறுப்பாகும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை...