follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுவசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிராக மறுசீராய்வு மனு

வசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிராக மறுசீராய்வு மனு

Published on

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேயை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்யுமாறு கோரி சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மறுசீராய்வு மனுவொன்றை முன்வைத்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புப் பணியகத்தின் சார்பில் சட்டமா அதிபர் இந்த மீளாய்வு மனுவை முன்வைத்துள்ளதுடன், பிரதிவாதியாக வசந்த முதலிகே பெயரிடப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகேவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என மேன்முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...