follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்"உக்ரைன் ஒருபோதும் ரஷ்யாவிற்கு வெற்றியாக இருக்காது"

“உக்ரைன் ஒருபோதும் ரஷ்யாவிற்கு வெற்றியாக இருக்காது”

Published on

உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடம் ஆக உள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது.
இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திடீரென உக்ரைன் சென்றார். ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் சென்ற அவர், ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரு தரப்பும் உக்கிரமான தாக்குதலை தொடங்குவதற்கு தயாராகி வரும் நிலையில், ஜோ பைடனின் இந்த திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், போலந்து சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைநகர் வார்சாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

அமெரிக்காவும் ஐரோப்பாவின் நாடுகளும் ரஷ்யாவைக் கட்டுப்படுத்தவோ, அழிக்கவோ முயலவில்லை. புதின் கூறியதுபோல் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவைத் தாக்கத் திட்டமிடவில்லை. அண்டை நாடுகளுடன் சமாதானமாக வாழ விரும்பும் மில்லியன் கணக்கான ரஷ்ய குடிமக்களை எதிரிகளாக பார்க்கவில்லை. உக்ரைன் ஒருபோதும் ரஷ்யாவிற்கு வெற்றியாக இருக்காது.

குண்டுகள் விழ ஆரம்பித்து ஒரு வருடம் கழித்து, ரஷ்ய டாங்கிகள் உருள ஆரம்பிக்கின்றன, உக்ரைன் இன்னும் சுதந்திரமாகவே உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு ஒரு வருடம் கழித்து தலைநகர் கீவ் வலுவாக நிற்கிறது, அது பெருமையுடன் நிற்கிறது, அது உயரமாக நிற்கிறது மற்றும் மிக முக்கியமாக கீவ் சுதந்திரமாக நிற்கிறது என தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...