follow the truth

follow the truth

May, 18, 2025
Homeஉள்நாடுசிறுபோகத்திற்கு தேவையான பசளை கையிருப்பில்

சிறுபோகத்திற்கு தேவையான பசளை கையிருப்பில்

Published on

சிறுபோகத்திற்கு தேவையான பசளை கையிருப்பு நாட்டில் போதுமானதாக இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுபோக விவசாய செய்கைக்கு 35,000 மெற்றிக் தொன் பசளை தேவைப்படுவதாக இலங்கை கொமர்ஷல் உரக் கம்பனியின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்தார்.

உழவர் அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சிறுபோகத்திற்கு 55,000 மெற்றிக் தொன் யூரியா உரம் நாட்டில் உள்ளதாகவும், மேலும் 20,000 மெற்றிக் தொன்கள் விரைவில் இறக்குமதி செய்யப்படும் எனவும் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சிறுபோக நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்...

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நிறைவு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தம் நேற்று (17) நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி,...

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல...