பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கி, புறப்படவிருந்த இரவு தபால் ரயில் சேவையும் கோட்டையில் இருந்து பதுளையை நோக்கி இன்றிரவு புறப்படவிருந்த ரயில் சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமையினால் இவ்விரு புகையிரதங்களின் நீண்ட தூர சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.