follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு பரீட்சை ஒத்திவைப்பு

ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு பரீட்சை ஒத்திவைப்பு

Published on

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச பட்டதாரிகளை இலங்கையின் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக நாளை நடைபெறவிருந்த போட்டிப் பரீட்சை அன்றைய தினம் நடைபெறாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பரீட்சை திகதி அறிவிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணை இன்றுடன் நிறைவடைகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை எதிர்வரும் திங்கட்கிழமை 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 கல்வியாண்டின் மூன்றாம் பாடசாலை தவணை கடந்த டிசம்பர் 5ஆம் திகதி முதல் 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு ஏப்ரல் 5ம் திகதி முதல் 16ம் திகதி வரை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...