follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1தேசிய சம்பள ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவு

தேசிய சம்பள ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவு

Published on

தேசிய சம்பள ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

குறித்த ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்படாது என்றும் இன்றுடன் அதன் செயற்பாடுகள் நிறைவுறுத்தப்படும் என ஜனாதிபதி செயலாளரினால் எழுத்து மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் சந்திராணி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் சம்பள ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நிறுவன பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சு திணைக்களங்களுக்கு உட்பட்ட சேவை யாப்பு ஆட்சேர்பு முறைமை சம்பள மற்றும் கொடுப்பனவுகளுக்கமைவான செயற்பாடுகள் பொது நிர்வாக அமைச்சின் நிறுவக பணிப்பாளர் நாயகத்திற்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சு திணைக்களம் மற்றும் மாகாண சபை ஊழியர் எண்ணிக்கை தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் கூட்டுத்தாபனம் அரசியலமைப்பு சபைகளுக்கமைவான சேவையாளர் எண்ணிக்கை போன்ற பணிகள் முகாமைத்துவ சேவையாளர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரிடம்...

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக “ஒரு அழகான வீடு -...