follow the truth

follow the truth

July, 17, 2025
HomeTOP1குழந்தை வேண்டாம் என்றால் கவுண்டரில் வைக்கவும்

குழந்தை வேண்டாம் என்றால் கவுண்டரில் வைக்கவும்

Published on

பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு நான்கு வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகள் என்றும், மீதமுள்ளவர்கள் 4 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

சில காரணங்களால் அவர்கள் விரும்பாத அல்லது தத்தெடுக்க முடியாத மூன்று மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் தனது குழந்தையினை குறிப்பிட்ட சாளரங்களில்/ கவுண்டரில் வைத்து விட்டு செல்ல முடியும் என்றும், அதற்காக அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் மாகாண நன்னடத்தை திணைக்களங்களின் மேற்பார்வையில் 379 குழந்தை பராமரிப்பு நிலையங்களில் சாளரங்களை நிறுவவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

“..எந்த இடத்திலும் கைவிடப்பட்ட அல்லது திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளுக்கு மாகாண நன்னடத்தை திணைக்களத்தினால் தேவையான பராமரிப்பு வழங்கப்படுகிறது.

இது குறித்து சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன் மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்கான சட்டப்பூர்வ அதிகாரங்களை வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளது.

கைவிடப்பட்ட குழந்தைகளை தத்தெடுப்பது தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும்..” என பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்கா உரிமையாளர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலயத்தின் உரிமையாளர் இன்று (17)...

மாத்தறை வலயத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்

மாத்தறை வலயத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் அதிகாரிகள், கடமையை தவறாக பயன்படுத்தியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை வலய...

ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் பெரும் தீ விபத்து: 50 பேர் உயிரிழப்பு

ஈராக்கின் வாசித் மாகாணத்தில் உள்ள அல்-குட் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இன்று (17) ஏற்பட்ட பெரும்...