follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2அரை சொகுசு பஸ்கள் குறித்து தீர்மானம்

அரை சொகுசு பஸ்கள் குறித்து தீர்மானம்

Published on

எதிர்வரும் மே மாதம் முதல் அரை சொகுசு பஸ்களை இரத்து செய்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அரை சொகுசு பஸ்கள் தொடர்பில் கிடைக்க பெறுகின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரேன்டா தெரிவித்துள்ளார்.

“போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலின்படி அரை சொகுசு சேவையை சாதாரண சேவையாகவும், சொகுசு சேவையாகவும் மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி, அனைத்து பஸ் உரிமையாளர்களும் தங்களது பஸ்களை சாதாரண சேவையாகவோ அல்லது சொகுசு சேவையாகவோ மாற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் ஏதும் வசூலிக்காமல் செய்து வருகிறோம். தற்போது 430 பஸ்கள் உள்ளன. இவ்வாறு சேவை திருத்தம் கோரி சுமார் 20 பஸ்களுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. மே மாதம் 31ம் திகதி வரை சேவை திருத்தம் மேற்கொள்ளப்படும்” என அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு...