follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுமூன்று நாட்களில் 700 டெங்கு நோயாளர்கள் பதிவு

மூன்று நாட்களில் 700 டெங்கு நோயாளர்கள் பதிவு

Published on

இந்த வருடத்தின் கடந்த 4 மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000ஐ தாண்டியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இலங்கை மருத்துவ சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் லஹிரு கொடித்துவக்கு.

மே மாதத்தின் முதல் சில நாட்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் சுமார் 700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போது கம்பஹா மாவட்டம் டெங்கு நோயினால் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர களுத்துறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் டெங்கு அபாய நிலை காணப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படும்

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். தற்போதுள்ள...

சட்டவிரோதமாக உர மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது

பொலன்னறுவையில் மோசடி உரவிற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் இந்தச்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...