follow the truth

follow the truth

July, 17, 2025
Homeஉள்நாடுமூன்று நாட்களில் 700 டெங்கு நோயாளர்கள் பதிவு

மூன்று நாட்களில் 700 டெங்கு நோயாளர்கள் பதிவு

Published on

இந்த வருடத்தின் கடந்த 4 மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000ஐ தாண்டியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இலங்கை மருத்துவ சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் லஹிரு கொடித்துவக்கு.

மே மாதத்தின் முதல் சில நாட்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் சுமார் 700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போது கம்பஹா மாவட்டம் டெங்கு நோயினால் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர களுத்துறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் டெங்கு அபாய நிலை காணப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று துறைசார் மேற்பார்வைக் குழுவில்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு இன்று...

கண்டி எசல பெரஹெர உற்சவம் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா உற்சவம் எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பமாக...

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும், மேல் மற்றும்...