follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP25 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Published on

நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பின் படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேசத்திற்கும் காலி மாவட்டத்தின் பத்தேகம, நாகொட, எல்பிட்டிய மற்றும் யக்கலமுல்ல பிரதேசங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, ரம்புக்கன, தெரணியகல, மாவனெல்ல, கேகாலை மற்றும் கலிகமுவ ஆகிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம, மாவத்தகம அலவ்வ மற்றும் பொல்கஹவெல பிரதேசங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல பிரதேசங்களிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...