follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுகம்பஹா மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

Published on

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம் டெங்கு அபாயம் அதிகம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்தில் இதுவரை 8000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் 2000 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை, 7,500 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகும் டெங்கு அபாயகரமான பிரதேசமாக கொழும்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 23 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 57 சுகாதார பிரிவுகள் கடந்த வாரம் வரை டெங்கு அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

2 நாட்கள் அல்லது 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...