follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுகம்பஹா மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

Published on

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம் டெங்கு அபாயம் அதிகம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்தில் இதுவரை 8000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் 2000 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை, 7,500 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகும் டெங்கு அபாயகரமான பிரதேசமாக கொழும்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 23 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 57 சுகாதார பிரிவுகள் கடந்த வாரம் வரை டெங்கு அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

2 நாட்கள் அல்லது 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...