follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP2ஜூலை முதல் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை குறைப்பு

ஜூலை முதல் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை குறைப்பு

Published on

எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி முதல் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, 10% விலையில் திருத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது மூலப்பொருட்களின் விலை வீழ்ச்சியின் பயனை நுகர்வோருக்கு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, உள்ளூர் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை 350 முதல் 450 ரூபா வரை குறைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சந்தை நிலவரங்கள் மற்றும் டொலரின் விலைக்கு ஏற்ப மேலும் விலை குறைப்பு தொடர்பில் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...