follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுநானோ திரவ உரம் இறக்குமதியில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய குழு

நானோ திரவ உரம் இறக்குமதியில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய குழு

Published on

2021 பருவத்தில் நெல் பயிரிடுவதற்காக நானோ திரவ உரங்களை இறக்குமதி செய்யும் போது கலப்படம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய, அமைச்சர்கள் குழுவின் ஒப்புதலின் பேரில் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமிக்க விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சீன கரிம உரக் கப்பலுக்கு பணம் செலுத்தியமை மற்றும் நானோ உரம் இறக்குமதி ஆகிய இரண்டும் நாட்டின் விவசாயத்திற்கு பயனளிக்காத இரண்டு நடவடிக்கைகள் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நானோ உரம் இறக்குமதியில் ஊழல் நடந்துள்ளதா என்பது குறித்த மனுக்கள் மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளை கருத்திற்கொண்டு விரிவான விசாரணையை ஆரம்பிக்க அமைச்சரவையின் அனுமதியின் பேரில் உரிய குழு நியமிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...