follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஜெரோம் பெர்னாண்டோவிற்கு எதிராக இடைக்கால மனு

ஜெரோம் பெர்னாண்டோவிற்கு எதிராக இடைக்கால மனு

Published on

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெரோம் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி மனுவொன்றை சமர்பித்திருந்தார்.

அதற்கு எதிராக வணக்கத்திற்குரிய எல்லே குணவம்ச தேரர் உள்ளிட்டோரால் இந்த இடைக்கால மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பௌத்தம் உள்ளிட்ட பிற மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜெரோம் பெர்னாண்டோ, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...