follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2எசல பெரஹெராவுக்கான மின் கட்டணம் தொடர்பாக கலந்துரையாடல்

எசல பெரஹெராவுக்கான மின் கட்டணம் தொடர்பாக கலந்துரையாடல்

Published on

ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா மின்விளக்கு அலங்கரிப்புக்காக மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ள நிதி தொடர்பாக மாவட்ட செயலாளரின் தலைமையில் நாளைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ தலதா மாளிகை, கண்டி நகரசபை பிரதேச செயலாளர் அலுவலகம் உள்ளிட்ட உரிய சகல நிறுவனங்களின் பங்குபற்றலுடன் இந்த கலந்துரையாடல் ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில், இடம்பெறவுள்ளதாக தியவதன நிலமே தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் எசல பெரஹெர விளக்கு அலங்காரத்துக்கான மதிப்பிடப்பட்ட தொகை 90 இலட்சம் ரூபாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் தலதா மாளிகை உள்ளிட்ட நான்கு மதஸ்தலங்களுக்கும் பெரஹெரா செல்லும் அனைத்து வீதிகளுக்குமான மின் விளக்கு அலங்காரத்துக்கான மின்சார செலவு ஒரு கோடியே 32 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெரா அடுத்த மாதம் 21ம் திகதி முதல் 31ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...

புத்தளத்தில் பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

சீரற்ற காலநிலை தொடர்வதால் புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற...