follow the truth

follow the truth

July, 22, 2025
HomeTOP1மருந்து விஷமானால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிறப்பு பயிற்சி

மருந்து விஷமானால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிறப்பு பயிற்சி

Published on

மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் கையாளும் போது ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளைத் தடுப்பதற்காக சுகாதார ஊழியர்களின் விழிப்புணர்வு திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் ஒவ்வாமை கண்டறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சை ஆகிய துறைகளில் இந்த விழிப்புணர்வு நடைமுறைப்படுத்தப்படும் என துணை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக, மயக்கவியல் நிபுணர்கள் சங்கம், அவசரகால வைத்தியர்கள் உட்பட பல திணைக்களங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கொடுக்கப்படும் மருந்துகளின் தடுப்பு, கண்டறிதல், மருந்தளவு செறிவு, கொடுக்கப்படும் அதிர்வெண் மற்றும் மருந்துகளை வழங்கும் முறை குறித்து ஊழியர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இவ்வாறான ஒவ்வாமைக்கான சிகிச்சையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்த விஜேசூரிய, சுகாதார ஊழியர்களின் அறிவை மேலும் மேலும் கூர்மைப்படுத்துவதே தவிர, புதிய நடவடிக்கையொன்றை மேற்கொள்வதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும் என்றார்.

“சமீப நாட்களில் நாடு முழுவதும் பல இடங்களில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலைகளால், சுகாதாரப் பாதுகாப்பு மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும். எனவே, நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல முடியாது. அது உயிருக்கு ஆபத்தாக முடியும். அதனால்தான் இந்த திட்டம் சிந்திக்கப்பட்டது,” என்று சுகாதார சேவைகள் துணைப் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மருத்துவமனைதான் அதிக குறைபாடுகளைக் கொண்ட மருத்துவமனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையான மட்டக்களப்பு போதனா மருத்துவமனையை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ...

கடந்த 3 ஆண்டுகளில் நாட்டைவிட்டு வெளியேறிய 1,489 வைத்தியர்கள்

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இதனால்...

சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச் சூடு...