follow the truth

follow the truth

July, 25, 2025
HomeTOP1ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி மாநாடு நாளை

ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி மாநாடு நாளை

Published on

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பான சர்வகட்சி மாநாடு நாளை (26) மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மட்டுமன்றி சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களையும் இதில் பங்கேற்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான இந்த சர்வகட்சி கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தி இன்னும் தீர்மானத்தினை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வர்த்தகக் கவுன்ஸிலின் உலகளாவிய சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் ஆரம்ப விழா

கொழும்பு ஷாங்க்ரிலா ஹோட்டலில் இன்று (25) நடைபெற்ற இலங்கை வர்த்தக கவுன்ஸிலின்(Global Federation of Sri Lankan Business...

அரசின் தீர்மானம் சரிதான்… மாணவர்களுக்கு வரலாறு கற்பிக்கக் கூடாது – அர்ச்சுனா

பாடசாலை மாணவர்களுக்கு வரலாற்றைக் கற்பிப்பதை நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்திருந்தார். 1600 ஆம் ஆண்டு...

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்ய உத்தரவு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த...