follow the truth

follow the truth

July, 26, 2025
Homeஉள்நாடு70 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

70 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

Published on

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் தொகையொன்றை கண்டுபிடித்துள்ளனர்.

சுமார் 70 மில்லியன் ரூபா பெறுமதியான ​​2,000 போதை மாத்திரைகள் மற்றும் 04 கிலோ குஷ், 300 கிராம் மெஜிக் காளான்கள் மற்றும் போதைப்பொருள் அடங்கிய சொக்லேட்டுகள் காணப்பட்டன.

சீதுவை பிரதேசத்தில் அமைந்துள்ள கொரியர் சேவை நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து கொழும்பு, மஹரகம மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்காக இந்தப் பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பின்னர் அவை போலி முகவரி என தெரியவந்தது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளன

கடந்த இரண்டு மாதங்களில் 21 காட்டு யானைகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பேச்சாளர் நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப், நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் இந்தப் பதவியில் இருந்த...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும்...