follow the truth

follow the truth

August, 19, 2025
HomeTOP2கார்களை விடுவிப்பதற்கான நிதி மோசடி - அழகுக்கலை நிபுணர் கைது

கார்களை விடுவிப்பதற்கான நிதி மோசடி – அழகுக்கலை நிபுணர் கைது

Published on

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், இறக்குமதி செய்யப்பட்ட 3 கார்களை விடுவிப்பதற்கான நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலவத்துகொடை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குறித்த சந்தேகநபர் அழகுக்கலை நிபுணர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 பேர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய அவர் கைதானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பாட்ட குறித்த நபர் முறைப்பாட்டாளர்களிடம் இருந்து 62 லட்சத்து 72 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...