follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டுவதாக இல்லை

உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டுவதாக இல்லை

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள குழுக்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்துவது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிலைப்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்ததன் காரணமாக மக்கள் ஆணையுடன் பாராளுமன்றத்திற்கு வந்த 134 பேரால் தற்போதைய ஜனாதிபதியை நியமிக்கப்பட்டதன் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளை கண்டறியும் பொறுப்பும் உண்மையை கண்டறியும் பொறுப்பும் தற்போதைய ஜனாதிபதிக்கும் உண்டு என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நேரத்தில் யாரும் பேதம் பாராது அனைவரும் உண்மையை பேச வேண்டும் என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக் கொண்ட பிணங்கள் மீது நடந்திய அந்த அரசியலை தாம் நிராகரிப்பதாகவும், இந்நேரத்தில் உண்மை நாட்டுக்கு தேவைப்பட்டாலும், அரசாங்கம் இந்த உண்மையை மறைப்பது எந்த தரப்பை பாதுகாக்கவென கேள்வி எழுப்புவதாகவும், அரசாங்கம் தொடர்ந்து உண்மையை மறைத்தால், பயங்கரவாதத்திற்கு எதிராக எதிர்க்கட்சி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை அவர்களுக்கு ஆதரவாக முன்நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தென்னை உற்ப்பத்தி செய்யும் விவசாயிகள் குழுவுடனான சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் இந்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியின் பின்னணியில், அந்தத் தாக்குதலின் பின்னணியில் திட்டமிட்டவர்கள், பிரதானமாக செயற்பட்டவர்கள், பிரதான சூத்திரதாரிகளாக செயற்பட்டவர்கள் தொடர்பில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து உண்மை என்னவென்று கேள்வி எழுப்புவதாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய உண்மையைக் கண்டறிய ஒரு அரசாங்கமாக ஏன் ஆர்வமற்று செயற்படுகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

சர்வதேச நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்புகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடக்க ஏற்பாட்டு குழு குறித்து சந்தேகத்திக்கிடமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ள நிலையில் உண்மை என்ன? உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டுவதாக இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...