follow the truth

follow the truth

May, 16, 2024
HomeTOP1ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Published on

ஆப்கானிஸ்தான், ஹெராத் நகரில் இருந்து 28 கி.மீ தொலைவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2,445க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

அந்த பகுதிக்கு அருகாமையிலேயே இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10,000 ஐ எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் ஹெராத் மாகாணத்தில் உள்ள 12 கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 1,000 வீடுகளும் இடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

WhatsApp: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நிறைவேற்று...

ரஷ்யா பிரச்சினைக்கு ஜனாதிபதியின் அவசர ஆலோசனை

விரைவில் ரஷ்யாவிற்கு தூதுக்குழுவை அனுப்புமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். இன்று (16)...

சஜித் மற்றும் அநுரவின் விவாதத்திற்கு பொது விடுமுறை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தை...