follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுதரவுகளை மீள பெற்றுக்கொள்ள நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளது

தரவுகளை மீள பெற்றுக்கொள்ள நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளது

Published on

தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் (NMRA) அழிவடைந்த தரவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக விசேட நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தரவுத்தளத்திற்கு பொறுப்பான நிறுவனத்தினூடாக குறித்த விசேட நிபுணர்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஔடதங்கள் உற்பத்தி, ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதனை முன்னிட்டு தகுதிவாய்ந்த 4 விசேட நிபுணர்கள் தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவர்களில் இருவர் இலங்கையை சேர்ந்தவர்கள் என ஔடதங்கள் உற்பத்தி, ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

தரவுகளை மீள பெற்றுக்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முழுமையான கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக ஔடதங்கள் உற்பத்தி, ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...

நோய்வாய்ப்படும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் மருத்துவமனைகளை நீர்மாணிக்க அவதானம்

காட்டு யானைகளுக்கு நோய் ஏற்படும் போது அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முறைமையொன்று இல்லை என்றும், அதனால் நடமாடும் மற்றும்...