follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுமூன்று மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

மூன்று மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

Published on

தற்போது நாடளாவிய ரீதியில் 67,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த மாதத்தில் 2500க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு அபாய வலயங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில், கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,அவற்றில் கொழும்பு மாவட்டம் மிகவும் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மாநகர சபை எல்லை, கொதட்டுவ, நுகேகொட மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா, அத்தனகல்ல, பைகம, களனி மற்றும் வத்தளை பிரதேசங்களிலும் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை மற்றும் பேருவளை பிரதேசங்களிலும் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காணப்படுவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன மேலும் தெரிவிக்கின்றார்.

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மக்களை மேலும் கேட்டுக் கொள்கிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...