follow the truth

follow the truth

May, 5, 2025
HomeTOP2அரிசி விலையில் எந்த மாற்றமும் இல்லை - இன்று முதல் சுற்றிவளைப்பு

அரிசி விலையில் எந்த மாற்றமும் இல்லை – இன்று முதல் சுற்றிவளைப்பு

Published on

அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையில் மாற்றம் இல்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

சம்பா அரிசி 230 ரூபாவிற்கும் நாட்டரிசி 220 ரூபாவிற்கும் கீரி சம்பா 260 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் மக்கள் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறியும் நோக்கில் இன்று(26) முதல் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை மறுதினம் மூடப்படவுள்ள பாடசாலைகள் விபரம்

உள்ளூராட்சி தேர்தல்கள் காரணமாக, மே 7, 2025 அன்று சில பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. அமைச்சகம்...

சாமர சம்பத்திற்கு மீண்டும் விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மே 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான்...

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தற்போது ட்ரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும்...