follow the truth

follow the truth

May, 5, 2025
HomeTOP2சட்ட விரோதமாக அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும்

சட்ட விரோதமாக அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும்

Published on

வருடத்திற்கு இருமுறை மின் கட்டணத்தை திருத்தம் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்தாலும், மின்சார கட்டணம் 3 ஆவது தடவையாகவும் திருத்தப்பட்டு கிட்டத்தட்ட 500 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பெரும்பான்மையான மக்கள் நிர்க்கதிக்காளாகியுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்கள் படும் துன்பம் ஆட்சியாளர்களுக்கு புரியவில்லை என்றும், மின்கட்டண உயர்வால் ஒரு குடும்ப அலகு உணவு மற்றும் கல்விக்கு ஒதுக்கும் செலவுப் பணம் கூட குறைந்துள்ளதாகவும், நாடு எவ்வளவு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டாலும் மக்கள் படும் துன்பங்களைப் புரிந்து கொள்ள வேண்டும், ஆனால் அரசாங்கத்திற்கு அவ்வாறான புரிதல் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரக் கட்டணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என்றும், அடக்குமுறை, அசௌகரியம், ஏழ்மை போன்றவற்றால் சுமக்க முடியாத சுமையைத் சுமந்துகொண்டிருக்கும் மக்கள் தாங்களாகவே வெகுஜன அலை எழுந்துள்ளனர் என்றும், சட்ட விரோதமாக அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும், தவறான தரவுகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்பாட்டிற்கு ஜனாதிபதி, அமைச்சர் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு என்பன பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக...

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க...