follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP2மசாலாப் பொருட்கள் ஏற்றுமதிக்கு தர சான்றிதழ் கட்டாயம்

மசாலாப் பொருட்கள் ஏற்றுமதிக்கு தர சான்றிதழ் கட்டாயம்

Published on

எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல், இலங்கையில் மசாலாப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது, ​​மசாலா பொருட்கள் மற்றும் அது தொடர்பான பொருட்களை விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் தர சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் இலங்கையின் மசாலாப் பொருட்களுக்கு அதிக கிராக்கி காணப்பட்டாலும், இதுவரையில் எமது நாட்டில் மசாலாப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான பணி ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மசாலா ஏற்றுமதியாளர்கள் அந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

மசாலா பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினரின் மசாலாப் பொருட்களுக்கான தர உத்தரவாத திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மசாலா மற்றும் தொடர்புடைய பொருட்கள் சந்தைப்படுத்தல் சபைக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி, சர்வதேச அங்கீகாரம் பெற்ற சிங்கப்பூரின் எஸ்ஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தேசிய மசாலாக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் இலங்கையிலுள்ள அனைத்து சிறிய மற்றும் நடுத்தர மசாலா உற்பத்தியாளர்களும் இந்த தரச்சான்றிதழைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மேற்படி கூட்டுத்தாபனத்தின் தலைவர் குமுதினி ஆர்ய குணசேன தெரிவித்தார்.

மேலும் இந்த சான்றிதழ் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழாக இருப்பதால், இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மசாலா உற்பத்தியாளர்கள் தங்களுடைய பொருட்களை சர்வதேச சந்தைக்கு எவ்வித தடையுமின்றி ஏற்றுமதி செய்ய முடியும்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...