பாடசாலை மாணவிகளுடன் காதல் உறவில் ஈடுபட்டு அவர்களை லாட்ஜ்களுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்த இரு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளதுடன், சந்தேகநபர்கள் கண்டி பிரதேசத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்டியில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் 15 வயதுடைய மாணவி ஒருவரை கண்டி நகரில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததையும், மாணவன் அதனை படம்பிடித்துள்ளார். பின்னர் அது மாணவியின் கைபேசிக்கு அனுப்பப்பட்டு அதனை தொடர்ந்து பயந்து மீண்டும் ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பின்னர், பாடசாலை மாணவி தான் முதலில் காதல் உறவில் ஈடுபட்ட பாடசாலை மாணவனிடம் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவை தனக்கு அனுப்புமாறு மாணவி கூறியுள்ளார். அதன்படி குறித்த மாணவி குறித்த மாணவனிடம் காணொளியை கொடுத்து அதனை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவியின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.