இந்தியாவின் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 25 அடி உயர திருவள்ளுவர் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைக்காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் இன்று திறந்து வைத்துள்ளார்.
3 தொன் எடையில் 25 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, விசேடமாக தமிழ் எழுத்துக்களால் முழுவதுமாக அமைக்கப்பட்டு நெற்றியில் அறம் என்ற சொல் பொறிக்கப்பட்டுள்ளது.
மாலை வேளைகளில் மின் விளக்குகளால் ஔிரும் வகையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிலை முழுவதும் உருக்கு இரும்பினால் (Steel) உருவாக்கப்பட்டுள்ளது.
52 கோடி இந்திய ரூபா செலவில் உருவாக்கப்படும் ‘Smart City’ திட்டத்தின் கீழ் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.