follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுசபாநாயகர் - உகண்டா ஜனாதிபதி, பிரதமர் சந்திப்பு

சபாநாயகர் – உகண்டா ஜனாதிபதி, பிரதமர் சந்திப்பு

Published on

பொதுநலவாய அமைப்பின் சபாநாயகர்களின் (CSPOC) 27வது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உகண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசவேனி, பிரதமர் ரொபின் நபஞ்ஜ, உகண்டா சபாநாயகர் அனிடா அனெத் அமங் ஆகியோரைச் சந்தித்தார்.

அத்துடன், சபாநாயகருக்கும் உகண்டாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஓரியம் ஹென்றி ஒய்கெலோ ஆகியோருக்கும் இடையிலும் சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்தச் சந்திப்புக்களில் இலங்கைக்கும் உகண்டாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் அதிகரிப்பது உள்ளிட்ட பரஸ்பர விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெறும் பொதுநலவாய அமைப்பின் சபாநாயாகர்களின் (CSPOC) 27வது மாநாட்டில் பங்கேற்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர் கடந்த ஜனவரி 03ஆம் திகதி உகண்டா சென்றிருந்தனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...