follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2எக்ஸ்பிரஸ் பேர்ல் - இழப்பீடு மீதான கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆட்சேபனைகள்

எக்ஸ்பிரஸ் பேர்ல் – இழப்பீடு மீதான கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆட்சேபனைகள்

Published on

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் 29 ஆம் திகதி பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கப்பலை வைத்திருக்கும் நிறுவனத்திடம் இருந்து பெறக்கூடிய இழப்பீட்டுத் தொகையை 19.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களாக நீதிமன்றம் முன்னர் மட்டுப்படுத்தியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் (எஸ்ஐசிசி) கப்பல் நிறுவனத்திடம் இருந்து இழப்பீட்டுத் தொகையை பெறக் கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விரிவான அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதன்பின்னர் வழக்கின் சாட்சியங்கள் விசாரிக்கப்படவுள்ளதுடன், துறைமுக அதிகாரி முதல் சாட்சியாக முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...